தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் நேற்று அதிக அளவு பட்டாசு வெடித்ததால் காற்று மாசு அளவு 800-ஐ கடந்து பதிவாகியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் காற்றில் மாசு அளவு சற்று குறைந்து பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகப் பகுதியில் காற்று மாசு அளவு 181, மணலியில் 154, வேளச்சேரியில் 86, ஆலந்தூரில் 18-ஆகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது..