CSK கேப்டனாக மீண்டும் தோனி; வெற்றி மீது வெற்றி வந்து அவரைச் சேருது!

CSK கேப்டனாக மீண்டும் தோனி; வெற்றி மீது வெற்றி வந்து அவரைச் சேருது!

சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவி ரவீந்திர ஜடேஜாவிடமிருந்து மீண்டும் தோனி கைக்கு வந்ததைத் தொடர்ந்து, நேற்று சன்ரைசர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றிக் கனியை எட்டிப் பிடித்தது.

சன்ரைசர்ஸ் அணி 203 ரன்கள் இலக்கை எட்டுவதற்காக தொடக்கத்தில் அடித்து ஆடியது. வெறும் 3 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில் முகேஷ் சவுத்ரி, பவுலிங்கில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். அதேபோல் முகேஷின் அபார பந்து வீச்சில் ராகுல்  திரிபாதி டக் அவுட் ஆகி வெளியேறினார், இப்படி வரிசையாக சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் வெளியேற, கடைசியில் 8 ஓவர்களில் 101 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற என்ற நிலை சன்ரைசர்ஸுக்கு ஏற்பட்டது. அந்த அணியின் கேன் வில்லியம்ஸ், சஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர் என்று வரிசையாக நடையைக் கட்டினர். 

இறுதிகட்டமாக கடைசி 2 ஓவர்களில் 50 ரன்கள் தேவை என்ற நிலையில் சன்ரைசர்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. 'தல'  தோனியின் அபார வியூகத்தால் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com