கமலாவை அடிக்கப்போன கோபி; ஷாக்கான ராதிகா! பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும்?

பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் போதை தெளிந்த கோபி, மாமியாரை அறைய கை ஓங்கியதால் ராதிகா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

1000 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. ஒரு பக்கம் செழியன் வாழ்க்கை சீரழிந்து, தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று வரும் நிலையில், எழிலை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி ஈஸ்வரி வற்புறுத்தி வருகிறார். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ராதிகா கரு கலைந்த பிறகு பல ட்விஸ்ட்களை கொண்டிருக்கிறது.

ராதிகாவின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரிதான் காரணம் என ராதிகாவும், கமலாவும் கோபியிடம் போட்டுக்கொடுக்க, தனது தாயை தவறாக நினைத்துக் கொள்கிறார் கோபி. இதனால் கொந்தளித்த கோபி, ஈஸ்வரிதான் ராதிகாவை கீழே தள்ளிவிட்டார் என நினைத்து தாயிடம் சண்டைக்குச் செல்கிறார். மேலும், தாயை வீட்டை விட்டு வெளியேற்றியதால் ஈஸ்வரி நிலைகுலைந்துள்ளார். வீட்டில் தினமும் அழுது கொண்டிருந்த ஈஸ்வரியை சமாதானம் செய்து, பாக்கியா வெளியூருக்கு காரில் அழைத்துச் சென்று மகிழ்ச்சி படுத்துகிறார்.

மேலும், ஈஸ்வரியின் பழைய சிநேகிதியை கண்முன் கொண்டு வந்து சர்ப்ரைஸ் செய்கிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஈஸ்வரி, மலரும் நினைவுகளாக தோழியிடம் பலவற்றை பகிர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, கஷ்டத்தின் எல்லைக்குச் சென்ற கோபி, மீண்டும் போதையை கையிலெடுக்கிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வர, ராதிகா கொந்தளித்து வருகிறார். ‘நானும்தான் குழந்தையை இழந்து தவிக்கிறேன். குடிக்கிறேனா’ எனக் கேட்டு சண்டை போடுகிறார்.

இப்படி, கடந்த சனிக்கிழமை எபிசோடில் கழுத்து வரை குடித்த கோபி, நிலை தடுமாறி விழுந்து கிடக்கிறார். இதனைப் பார்த்த செழியனும், எழிலும் தந்தையை ராதிகா வீட்டில் விட்டு விடுகின்றனர். தொடர்ந்து, ‘ஏன் இப்படிக் குடிக்கிறீர்கள்?’ என்று கேட்டு கோபியிடம் சண்டைக்குச் செல்கிறார் கமலா. போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த கோபி, கமலாவால்தான் பிரச்னை வந்தது. இனி, அவளுக்கு மரியாதை இல்லை என தரக்குறைவாகப் பேசுகிறார். இதனால் கோபமடைந்த கமலா உள்ளே சென்று விடுகிறார்.

அந்த வகையில் இன்று போதை தெளிந்த கோபியை மன்னிப்பு கேட்கச் சொல்லி ராதிகா வற்புறுத்துகிறார். அப்போது வாக்குவாதம் முற்றவே, கமலா மீண்டும் ஈஸ்வரியை கொலைகாரி எனச் சொல்ல, கோபமடைந்த கோபி, கமலாவை அறைய கை ஓங்குகிறார். இதனால் ஷாக்கான ராதிகா என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் இதைப் பார்க்கலாம். மாமியார், மருமகன் சண்டையால் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com