பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் மஹேஸ்வரி!

Maheswari
Maheswari

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், சீசன் 6 நடைபெற்று வருகிறது. தற்போது 5ஆவது வாரத்தை நிறைவு செய்து 35 நாட்களை கடந்து விட்ட இந்த சீசனானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அத்தோடு இந்நிகழ்ச்சியானது எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கான முக்கிய காரணம் போட்டியாளர்களிடையே இடம்பெறுகின்ற சண்டைகளும், சலசலப்புக்களும் தான். அதுவும் வார இறுதியானால் கமல்ஹாசன் அவர்கள் ஹவுஸ் மேட்கள் இடையே எழும் பிரச்சனைகளை விசாரித்து பஞ்சாயத்து செய்வார். கூடவே குறைவான வாக்குகள் பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டினை விட்டு வெளியேறுவதும் வழக்கம்.

இந்த 6வது சீசன் போட்டியாளர்கள் அனைவருமே கண்டென்ட் கிரியேட் செய்வதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார்கள். கமலஹாசனே அவர்களை வியந்து போய் இருபத்தியோரு பேருமே நிகழ்ச்சிக்கான ஸ்ரிப்ட்டினை எழுதுகிறார்கள் என வேடிக்கையாக குறிப்பிட்டார்.

பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6

21 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

இதில் இந்த வாரம் ராம் அல்லது மஹேஸ்வரி தான் குறைந்த வாக்குகளை பெற்றிருந்தார்கள். இவர்களில் ஒருவர் வெளியேறுவார் என்று மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை அமைதியாக இருந்த ராம் தற்போது தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கியுள்ளார். அதனால் மஹேஸ்வரி இதுவரை நன்றாக விளையாடினாலும், அடிக்கடி கத்தி கூச்சல் செய்து சண்டையிடுவது பிக்பாஸ் ரசிகர்களுக்கு சற்று எரிச்சலடைய வைத்திருக்கலாம். எனவே மகேஸ்வரி மிக குறைந்த அளவு வாக்குகள் பெற்று இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதுவரை 35 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தார் மஹேஸ்வரி .

ஜிபி்முத்து , ஷாந்தி, அசல் கோளார், ஷெரினாவை தொடர்ந்து ஐந்தாவது போட்டியாளராக இந்தவாரம் கமல்ஹாசன் அவர்களால் மஹேஸ்வரி எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com