பிரபல சீரியல் விரைவில் முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'மகராசி சீரியல்' விரைவில் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சீரியல்களில் தினசரி அதிகம் பார்க்கப்படும் தொடர்களுள் ஒன்று மகராசி. TRP-யில் தொடர்ந்து நல்ல இடத்தைப் பிடித்து வரும் இந்த சீரியல், தினமும் அதிகம் பார்க்கப்படும் முதல் ஐந்து சீரியல்களுள் ஒன்று. அக்டோபர் 2019 முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 1030 எபிசோட்களுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது. இதையடுத்து ஜூலை மாதம் இந்த சீரியல் முடிவுக்கு வரவிருக்கிறது.
மகராசியில் ஆர்யன் மற்றும் ஸ்ரீத்திகா சனீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் விஜய், மௌனிகா தேவி, பிரவீனா, தீபன் சக்ரவர்த்தி, அஷ்வினி, செந்தில்நாதன், நேத்ரா ஸ்ரீ, ரவிசங்கர், சாத்விக், கீர்த்தனா, ராம்ஜி மற்றும் வந்தனா மைக்கேல் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த தொடரை எஸ்.பி.ராஜ்குமார் மற்றும் என்.சுந்தரேஷ்வரன் இயக்கியுள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை மா.இளையராஜா மற்றும் மகேஷ் பாபு கையாள்கின்றனர். கடந்த சில மாதங்களாக பாரதி புவியரசன், செண்பகம், சிதம்பரம் மற்றும் பலரை மையமாக வைத்து மகராசி சீரியல் ஒளிபரப்பானது. பல பிரச்சினைகளுக்குப் பிறகு இறுதியாக புவியரசனை குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர்.