விரைவில் முடிவுக்கு வரப்போகும் பிரபல சீரியல்.. ரசிகர்கள் ஷாக்!

eeramana rojave serial
eeramana rojave serial

என்னதான் திரைப்படங்கள், வெப்சீரிஸ் என்று இருந்தாலும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இன்றளவும் கிராமங்களில் பலரும் காலை முதல் இரவு தூங்கும் வரை சீரியல்களிலேயே மூழ்கின்றனர். சிறு குழந்தை, இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் சீரியல்கள் விரும்பிகளாகவுள்ளனர்.

ஒவ்வொரு டிவியும் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. சீரியல் முடிவடைந்து விட்டால் 2ஆம் பாகம், 3ஆம் பாகம் என்றெல்லாம் கதை நகர்ந்து கொண்டே தான் போகிறது. அப்படி ஒரு பிரபல சீரியல் தான் தற்போது முடிவுக்கு வரப்போகிறது.

ஈரமான ரோஜா சீரியல் நடிகை
ஈரமான ரோஜா சீரியல் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஈரமானே ரோஜாவே’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஒரே வீட்டில் காதலித்த நபரின் சகோதரரை திருமணம் செய்து வாழ்வது போன்ற கதையுடன் இருந்தது. இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில், இதன் 2ஆம் பாகம் தான் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதி செய்யும் விதமாக ஈரமான ரோஜா சீரியல் கதாநாயகி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில விஷயங்கள் முடிகிறதா என்று பதிவிட்டுள்ளார். அவர் ஈரமான ரோஜாவே சீரியலைத்தான் சொல்கிறார் என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com