அஜித் ரசிகர்களுக்கு வந்த ஷாக் நியூஸ்... என்ன தெரியுமா?

Ajith kumar
Ajith kumar
Published on

நடிகர் அஜித்துக்கு மீண்டும் சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் அவர் ஓய்வு எடுக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித். தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான, ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து விடாமுயற்சி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் அஜித் அஜர்பைஜான், துபாய் என உலாவி வருகிறார்.

இயக்குநர் மகிழ் திருமேனி செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் இணை இயக்குநராகப் பணியாற்றி அதன் பிறகு இயக்குநராக அறிமுகமானவர். இவரின் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம்தான் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா என பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை பிரபல லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்ற வருடம் மே 1, விடாமுயற்சி எனப் பெயர் அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4 அன்று தொடங்கப்பட்டது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அஜித் மற்றும் ஆரவ் காருக்குள் உட்கார்ந்து இருக்கும் நிலையில் அந்த கார் கிரேன் உதவியால் அந்தரத்தில் தூக்கப்படுகிறது. அதன்பின் ஒரு கட்டத்தில் அந்தரத்திலேயே கார் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் அஜித் மற்றும் ஆரவ் காரின் உள்ளிருக்கும் காட்சியை பார்க்கும்போது திகில் அடையச் செய்தது.

இதையும் படியுங்கள்:
"நீ சமைச்சாலே நல்லாதான் இருக்கும்"... மீனாவை ஐஸ்வைத்த முத்து!
Ajith kumar

கடந்த மார்ச் மாதம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல் வெளிவந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அவருடைய மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது என தகவல்கள் வெளியானது. இதன்பின் அவர் நலமாக இருக்கிறார், படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார் என்றும் தெரியவந்தது.

இந்த நிலையில், தற்போது அஜித் கைவசம் இரண்டு திரைப்படங்கள் உள்ள நிலையில், விடாமுயற்சி முடித்தபின் 'குட் பேட் அக்லி' படத்தையும் கையோடு முடித்துவிட்டு, மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய தயாராகியுள்ளாராம் அஜித். இதற்கு முன்னதாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை குணமடைய வேண்டும் என்றால் இந்த அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டுமாம். ஆகையால் அஜித் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இந்த அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து அவர் ஒரு வருடம் ஓய்வு எடுக்கபோவதாக ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com