நடிகர் சிவகார்த்திகேயன் முருகதாஸ் பட கூட்டணியில் இணையும் வில்லனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சினிமா பயணத்தில் பல நடிகர்கள் விலகி வரும் நிலையில், அந்த இடங்களை நிரப்பும் நடிகராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து வருகிறார். சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் கொல்லப்பட்ட சம்பவத்தை வைத்து உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அமரன் படத்தின் படப்பிடிப்பை முடிந்த கையேடு, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், தற்போது சிவகார்த்திகேயன் தன்னுடைய SK23வது படத்தை நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கிய நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், சிவகார்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகாத்திகேயன் வித்தியாசமான லுக்கில் இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தொடர்ந்து தற்போது இந்த படத்தின் புது அப்டேட்டாக வில்லன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இதில் வில்லனாக இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் துப்பாக்கி, அஞ்சான் உள்ளிட்ட மாஸான படங்களில் நடித்து பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி படத்தில் சைலண்டாக இருந்து மிரட்டிய வித்யுத் ஜம்வால் தற்போது மீண்டும் முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க இருப்பது ரசிகர்களிடயே மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.