கேவலமான நோக்கத்துடன் பணத்திற்காக வதந்திகளை பரப்புகிறார்கள்:சாய்பல்லவி காட்டம்!

Sai pallavi
Sai pallavi

டிகை சாய்பல்லவிக்கு திருமணம் நடைபெற்றதாக புகைப்படத்துடன் பரவும் வதந்திகளுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள சாய் பல்லவி, ”தனக்கு திருமணம் நடைபெற்றதாக சிலர் பணத்திற்காக கேவலமான நோக்கத்துடன் வதந்தி பரப்பி வருவதாக” கூறியுள்ளார். தமிழ்த் திரையுலகில் சமந்தா, திரிஷா ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக வதந்திகள் பரவிய நிலையில், தற்போது சாய் பல்லவியும் அதில் சிக்கியுள்ளார். அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் பூஜையில் எடுத்த புகைப்படத்தை க்ராப் செய்து சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

SK21 MOVIE POOJA
SK21 MOVIE POOJA

அதில், அனைவரும் மாலையுடன் இருக்கும் பகுதியை நீக்கிவிட்டு, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் மட்டும் மாலையும், கழுத்துமாக இருப்பதுபோன்ற புகைப்படம் வெளியானது. இதற்கு நடிகை சாய் பல்லவி காட்டமாக ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் "உண்மையில் நான் என்னைப் பற்றி பரவும் வதந்திகளை கண்டு கொள்வதில்லை. ஆனால், குடும்பம் போல் இருக்கும் நண்பர்களைப் பற்றி வதந்தி பரவும்போது அதைப் பற்றி பேசவேண்டி உள்ளது என்று கூறியுள்ளார்.

திரைப்படத்தின் பூஜையின் போது எடுத்த புகைப்படத்தை வேண்டும் என்று கிராப் செய்து இப்படி ஒரு கேவலமான நோக்கத்துடன் பணத்திற்காக இப்படி பரப்பி வருகின்றனர். எனது வேலை தொடர்பான மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளும் சமயத்தில், இது போன்ற அர்த்தமற்ற செயல்களுக்கு விளக்கம் அளிப்பது வேதனையாக உள்ளது என்று பதிவிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com