திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த குண்டூர் காரம் ஸ்ரீலீலா!

ஸ்ரீலீலா
ஸ்ரீலீலா

திருப்பதி ஏழுமலையானை குண்டூர் காரம் கதாநாயகி ஸ்ரீலீலா தரிசனம் செய்தார்.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்களும் கூட அடிக்கடி வந்து செல்வார்கள். அந்த வகையில் நடிகை ஸ்ரீலீலா திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

இவரை பார்த்த மக்கள், ஸ்ரீலீலாவா என அதிர்ச்சியில் உறைந்தனர். குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த ஸ்ரீலீலா, விஐபி இடைவேளையின்போது நேர்த்திக்கடன் செலுத்தினார். தரிசனம் முடிந்ததும் கோயில் ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். சாமி தரிசனம் செய்ய வந்த ஸ்ரீலீலாவுக்கு கோயில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து ஆலயத்துக்கு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி எடுக்க குவிந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறினார். புதியதாக பல படங்களில் நடித்திருப்பதாகவும், தான் நடிக்கப்போகும் படங்களை தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிக்கும் என்றும் கூறினார்.

நடிகை ஸ்ரீலீலா, சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள குறிச்சி மடதாபட்டி பாடல் பட்டி தொட்டியெல்லாம் ட்ரெண்டாகியது. அதில் இவர் நடனமாடிய காட்சிகள் அதிக கவனம் ஈர்த்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com