மீண்டும் வில்லியாக ஐஸ்வர்யா ராய்!

மீண்டும் வில்லியாக ஐஸ்வர்யா ராய்!

1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'இருவர்' படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமாகி, அதன்பின் 'ஜீன்ஸ்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற ஒரு சில முக்கிய தமிழ்ப்படங்களில் நடித்தாலும், அதிகளவில் இந்தி படங்களில் நடித்ததன் மூலம், இந்திய அளவில் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வருபவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.

இதுவரை 49 படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நந்தினியாக அழகின் உருவாக வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், அவரது வில்லத்தனமான நடிப்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. இதையடுத்து, ஐஸ்வர்யா ராய் மீண்டும் வில்லியாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்ற படமான 'RRR' படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆரை வைத்து இயக்குநர் பிரசாந்த் நீல் 'NTR 31' படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியங்கா சோப்ராவை நடிக்கவைக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் வில்லியாக நடிக்க, நடிகை ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படம் ஐந்து மொழிகளில் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் வில்லியாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com