“காபி குடிக்க வாங்களேன்!” - ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ ஷாக்

பாலிவுட் பூமராங்
 “காபி குடிக்க வாங்களேன்!” - ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ ஷாக்

டிக்க வரும் பல சினிமா நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் உள்ளிட்ட பலரும் ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ பிரச்னையைச் சந்தித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றனர்.

நடிகைகளுக்கு மட்டுமல்ல; நடிகர்களுக்கும் தொல்லைகள் அதிகம் இருக்கின்றன. சினிமா ஹீரோயின்களே டார்ச்சர் கொடுப்பதாக போஜ்புரி பட ஹீரோ ரவிகிஷன் தற்சமயம் அளித்த பேட்டி ஒன்றில் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். ரவிகிஷன் தெலுங்கு மற்றும் ஹிந்திப்படங்களில் நடித்து இருக்கிறார்.

தவிர, எனது தந்தையார் என்னிடம் குறுக்குவழியில் போய் எப்போதுமே சம்பாதிக்கக்கூடாது. அப்படி சம்பாதித்தால் அது நிலைக்காது என்று கூறுவது வழக்கம். எனது மனதில் அது பதிந்து இருக்கிறது.

ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆரம்பக் கால கட்டத்தில் தேர்வாகி, ஓகே கூறி இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகும் சமயம், அந்தப் பெண் பிரபலம் எனக்கு ஃபோன் பண்ணி நைட் காபி குடிக்க வர்றீங்களான்னு கேட்டார். பொதுவாக காபி குடிக்க பகலில்தான் அழைப்பார்கள். சாதாரண நடிகரான என்னை இவ்வாறு அழைத்ததும் மறுத்துவிட, பெண் பிரபலம் டார்ச்சர் செய்தார். நடிகையின் அழைப்பை மறுத்ததால், அப்படத்திலிருந்து நீக்கப்பட்டேன். அப்போதுதான் எல்லா விஷயமும் முழுமையாக எனக்குப் புரிந்தது.

அந்தப் பெண் பிரபலம் யார்? என்ற கேள்வி எழுப்ப, “அவர் பெரிய பிரபலம். பெயர் சொல்ல விரும்பவில்லை”

(ஆசையெனும் அலையில் தூண்டில் மீனாய் சிக்க வேண்டாமே!)

 

அமிதாப் வெளியிட்ட 5 கிரகங்களின் வீடியோ!

வானத்தில் அரிய நிகழ்வாக செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் ஒரே நேரத்தில் நேற்று முன்தினம் (28.3.2023) அணிவகுத்தது அபூர்வமான விஷயமாகும்.

இந்த அரிய நிகழ்வு சூரியன் அஸ்தமனமான பிறகு மேற்குத் தொடுவானில் நிலாவுக்கு அருகே சில விநாடிகள் நீடித்தது. இந்த 5 கிரகங்கள் அணிவகுத்த வீடியோவை அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 45 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், அவரது பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அப்பதிவில், “என்ன ஒரு அழகான காட்சி! 5 கிரகங்கள் ஒன்றாக இன்று இணைந்துள்ள அற்புதமான மற்றும் அரிதான காட்சிக்கு நீங்களும் சாட்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்பதாகும்.

வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்தன.

(சூப்பர்! சூப்பர் ஸ்டார்!)

ஒரு தந்தையின் நெகிழ்வு!

ளம் நட்சத்திர காதல் ஜோடி அலியாபட் – ரன்பீர் கபூர் இருவருக்கும் ஏப்ரல் 14, 2022ஆம் ஆண்டு திருமணம் நடந்த ஒரு சில மாதங்களில் விரைவில் எங்கள் குழந்தை என அலியாபட் ஒரு பதிவை வெளியிட்டார். அதன்படி நவம்பர் 2022இல் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார்.

அலியாபட்- ரன்பீர் கபூர் இருவரும் தங்கள் அழகான பெண் குழந்தைக்கு ‘ரஹா’ எனப் பெயரிட்டனர்.

இந்நிலையில், ரன்பீர் கபூர், “20 நிமிடங்களுக்கு மேல் என் குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கையில் புத்துணர்ச்சி ஏற்படும். அதன் பிறகுதான் விமான நிலையம் செல்வேன். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், குழந்தை ரஹா பற்றி நினைப்பதும், போட்டோவைப் பார்ப்பதுமாக இருப்பேன்.

தந்தையாக இருக்கும்போதுதான் இத்தகைய உணர்வுகள் ஏற்படும். அன்பிற்கு மொழியில்லை என்பது புலப்படும். அன்பைப் பற்றிய புதிய புரிதல்களை, உணர்வுகள் ஏற்படுத்தும்” என்று நெகிழ்வுடன் கூறினார்.

(அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com