லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

தனது அடுத்தப் படத்தில் கவனம் செலுத்த இருப்பதால் சமூக ஊடகங்களிலிருந்து விலகுவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மொத்தம் 10 படங்கள் மட்டுமே எடுக்கவுள்ளதாக திரையுலகில் களமிறங்கிய லோகேஷ் கனகராஜ், டாப் நடிகர்களை வைத்து படமெடுத்து 5 படங்களில் ஹிட் எடுத்துள்ளார். ஹீரோக்களுக்கு ரசிகர்கள் இருப்பது போன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இதுவரை சமூக வலைதளங்களில் இல்லாத அவர், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக வதந்திகள் பரவ, தான் பேஸ்புக்கில் இல்லை என விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், தான் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ள ‘ஃபைட் கிளப்’ திரைப்படத்துக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது அடுத்த படத்துக்கான கதையை எழுத ஆரம்பித்துள்ளதால், அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். இந்தக் காலக்கட்டத்தில் நான் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பேன். பாசிட்டிவாக இருங்கள், நெகட்டிவிட்டியை புறந்தள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார். 

லோகேஷின் இந்த முடிவுக்கு ரசிகர்களின் தொடர் விமர்சனங்கள், கேலிதான் என கூறப்படுகிறது. லியோ படத்தின் 2ஆம் பாதி சரியில்லை என லோகேஷ் கூறியதை ரசிகர்கள் விமர்சித்து வந்ததால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

‘லியோ’ படத்துக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். ரஜினியின் 171-வது படமாக உருவாகும் இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com