கடைசி உலகப் போர்... மிரட்டலான லுக்கில் ஹிப்ஹாப் ஆதி!

Kadaisi Ulaga Por
Kadaisi Ulaga Por
Published on

ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான 'மீசைய முறுக்கு' என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதையின் நாயகனாகவும் அறிமுகமான நடிகர் ஆதி, அதற்கு முன்னதாகவே பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளராகவும் தனது பணியை சிறப்பாக செய்து வரும் ஆதி, இறுதியாக இந்த 2024ம் ஆண்டு வெளியான சுந்தர் சி-யின் அரண்மனை 4 திரைப்படத்திற்கும், தனது PT சார் திரைப்படத்திற்கும் இசையமைத்திருந்தார். அவ்வப்போது தெலுங்கு திரைப்படங்களுக்கும் அவர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஷால் நடித்த ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. ஜெயம் ரவியின் தனி ஒருவன், சுந்தர் சி நடித்து இயக்கிய அரண்மனை 2, 4 உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இவர் நடித்து வெளியாகும் படங்களுக்கும் இவர் இசையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஹிப் ஹாப் ஆதி நடித்த முதல் படமான மீசைய முறுக்கு படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

இயக்குனராக, நடிகராக, இசையமைப்பாளராக என்று பிசியாக பயணித்து வரும் அவர், இப்போது தனது அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய திரைப்படத்தை பொறுத்தவரை எழுத்து, இயக்கம், தயாரிப்பு மற்றும் இசை என்று அணைத்து பணிகளையும் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களே நிர்மாணிக்கவுள்ளார்.

கடைசி உலகப் போர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைகளத்தை கொண்ட திரைப்படமாக இருக்கும் என்றும், இது யுத்த களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் என்றும் கூறப்படுகிறது. முதல் தோற்றம் ஆதியின் புகைப்படத்துடன், துப்பாக்கி, பீரங்கிகள், குண்டுவெடிப்பு என போர்க்களத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த படத்தினை ஹிப் ஹாப் தமிழா எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் இந்த படத்தினை ஹிப் ஹாப் ஆதியே தயாரிப்பதுடன் தானே இயக்கவும், தானே நடிக்கவும், தானே இசை அமைக்கவும் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com