நடிகை திரிஷா,மன்சூர் அலிகான்
நடிகை திரிஷா,மன்சூர் அலிகான்

நடிகை திரிஷா ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும்.. மன்சூர் அலிகான் வழக்கு!

மீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மன்சூர் அலிகானின் இந்த வீடியோவை பார்த்த நடிகை த்ரிஷா, தனது எக்ஸ் தளத்தில், இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

த்ரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர். த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிரஞ்சீவி,

நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட திரைபிரபலங்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர். இந்த சம்மனை ஏற்று நடிகர் மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும் என திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியது. இதையடுத்து போலீசாரின் கடிதத்திற்கு நடிகை திரிஷா பதிலளித்துள்ளார். அதில், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டதால்

அவர் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை திரிஷா தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, சக திரைநாயகி த்ரிஷாவே, மன்னித்துவிடு’ என்று மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தான் தெரிவித்த கருத்துக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை த்ரிஷா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். அதில், முழு வீடியோவையும் பார்க்காமல், தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம்சாட்டியுள்ள மன்சூர் அலிகான், மூன்று பேரும் தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு வரும் 11ம்தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com