ஷூட்டிங்கில் விபத்து.. ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பினார் நடிகர் பிரித்விராஜ்..!
நடிகர் பிரித்விராஜ் ஆபரேஷன் முடிந்து வீடு திரும்பியதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் விளையாத் புத்தா திரைப்படத்தை இயக்குனர் ஜெயம் நம்பியார் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள மறையூரில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது சண்டைகாட்சி படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக திடீரென கீழே விழுந்த நடிகர் பிரித்விராஜுக்கு தசைநார் கிழிந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு விளையாத் புத்தா படப்பிடிப்பின் போது, விபத்து ஏற்பட்டதாகவும், அறுவை சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உங்களது அன்புக்கும், கருணைக்கும் நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்.