பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் நிக் ஜோனாஸ் ஆகியோர் தங்கள் மகள் மால்டி மேரியுடன் இந்தியாவில் உள்ளனர். ருஸ்ஸோ பிரதர்ஸின் சிட்டாடல் வெப்சீரிஸுக்கான இந்திய புரோமோ நிகழ்வுக்கு முன்னதாக பிரியங்காவின் குடும்பம் மும்பை வந்திறங்கியது. மும்பையின் கலினா விமான நிலையத்தில் தனது குடும்பத்தினருடன் வந்திறங்கியபோது பிரியங்கா குடும்பத்தினர் அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். பிரியங்கா தனது மகள் மால்டியின் முகத்தை மறைக்காமல் அவரை மகளை கைகளில் ஏந்திக்கொண்டு, ஜோனஸுடன் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார்.
முன்னதாக ஏப்ரல் 3 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ள ஆசிய பசிபிக் நிகழ்வில் கலந்து கொள்ள பிரியங்காவும் அவரது சிட்டாடல் சக நடிகர் ரிச்சர்ட் மேடனும் தயாராக உள்ளனர் என்கின்றன ஊடகச் செய்திகள்.
சரி இப்போது மால்டி மேரியின் இந்திய வருகையைப் பற்றி மேலும் சற்று தெரிந்து கொள்வோம்.
பிரியங்கா பிங்க் நிற ஸ்போர்ட்டி உடையில் இருந்தார்.நிக் தனது சாதாரண அவதாரத்தில் ஸ்டைலாகத் தெரிந்தார். இது குழந்தை மால்டியின் முதல் இந்தியா வருகை என்பதால் குழந்தையை வரவேற்று ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்திருந்தனர். குழந்தையின் இந்திய வருகையைப் பாராட்டி இந்தியிலும், ஆங்கிலத்திலும் வாழ்த்து மலை குவிந்தது. ரசிகர் ஒருவர் "என் கண்களை குழந்தையிடம் இருந்து எடுக்க முடியவில்லை." என்று மகிழ்ச்சி பொங்க கமெண்ட் செய்தி்ருந்தார்.
முன்னதாக பிரியங்காவும் நிக் ஜோனஸும் ஜனவரி 15, 2022 அன்று வாடகைத் தாய் மூலம் தங்கள் முதல் குழந்தையை பெற்றெடுத்தனர் என்பது அனைவரும் அறிந்த செய்தியே!