"குருவே சரணம்" ரஜினி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய லாரன்ஸ்!

"குருவே சரணம்" ரஜினி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய லாரன்ஸ்!

ந்திரமுகி திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 1-ல் கலக்கிய ரஜினிகாந்த் காலி விழுந்து ஆசி பெற்றார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்றளவும் சந்திரமுகிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து தான் வருகிறார்கள்.

அவ்வபோது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சந்திரமுகி படத்தை பார்க்க ரசிகர்கள் இன்றும் ஆர்வமாக உள்ளனர். ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு என டாப் நடிகர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து நடித்து பட்டைய கிளப்பியிருப்பார்கள். இந்த படத்தின் 2ஆம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டுவந்தனர்.

இவர்களின் ஆசைக்கேற்ப இயக்குனர் பி.வாசு 2ஆம் பாகம் எடுக்க முடிவெடுத்தார். அதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார்.

அதேபோல் முதல் பாகத்தில் நடித்த நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. அதற்குப் பிறகு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் சில மாதங்களாக அந்த படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

அதனை தொடந்து கடந்த மே மாதம் முதல் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கான இறுதி கட்டப்பட படிப்பை தொடங்கினர் படக்குழு. அதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டவர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் இவர்களை தவிர லட்சுமிமேனன் கங்கனா ரனவத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் நாளை மறுநாளான செப்டம்பர் 28ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த நிலையில், சந்திரமுகி2வின் கதாநாயகனான நடிகர் ராகவா லாரன்ஸ், சந்திரமுகி 1-ன் கதாநாயகனான நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றார்.மேலும் மாபெரும் வெற்றியடைந்த ஜெயிலர் படத்திற்காக ரஜினியை வாழ்த்தியவதாகவும் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com