வாரிசு குறித்த கேள்வி... ரஜினி உடைத்த உண்மை! இணையத்தை கலக்கும் பழைய வீடியோ!

Rajini Interview
Rajini Interview
Published on

இந்தியத் திரையுலகின் அடையாளமாகவும், கோடிக்கணக்கான ரசிகர்களின் எமோஷனாகவும் திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பெங்களூருவில் சாதாரண பேருந்து நடத்துனராகத் தொடங்கி, இன்று இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் உச்ச நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர். திரையில் அதிரடி காட்டும் ரஜினிகாந்த், நிஜ வாழ்க்கையில் மிகவும் மென்மையானவர் என்பது பலரும் அறிந்ததே. குறிப்பாக, தனது குடும்பம் மற்றும் மகள்கள் மீது அவர் கொண்டிருக்கும் பாசம் அளவிட முடியாதது. இந்நிலையில், மறைந்த நடிகர் விவேக் உடன் ரஜினி உரையாடும் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் மனதை நெகிழச் செய்துள்ளது.

திரைப்பயணம்!

 தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இது ஒருபுறமிருக்க, ரஜினியின் இரண்டு மகள்களான ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும் தந்தையைப் போலவே திரைத்துறையில் தங்களுக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளனர்.

மூத்த மகள் ஐஸ்வர்யா, தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தின் பாடல்கள் உலகளவில் ஹிட்டடித்தன. அதனைத் தொடர்ந்து ‘வை ராஜா வை’ மற்றும் சமீபத்தில் ரஜினியே சிறப்புத் தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ போன்ற படங்களை இயக்கினார். ‘லால் சலாம்’ பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், ஐஸ்வர்யாவின் முயற்சி பாராட்டைப் பெற்றது. தற்போது அவர் அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், இளைய மகள் சௌந்தர்யாவும் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் படமான ‘கோச்சடையான்’ மூலம் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

விவேக்கின் கேள்வியும் ரஜினியின் பதிலும்: இப்படி இரு மகள்களும் சாதனைப் பெண்களாக வலம் வரும் சூழலில், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த பழைய வீடியோவில், நடிகர் விவேக் ரஜினியிடம் மிக முக்கியமான ஒரு கேள்வியை முன்வைக்கிறார். "உங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு ஆண் வாரிசு இல்லையே என்ற ஏக்கம் உங்களுக்கு எப்போதாவது இருந்ததுண்டா?" என்பதுதான் அந்த கேள்வி.

இதையும் படியுங்கள்:
ரஜினி ஓபன் டாக் : படையப்பா திரைப்படத்தில் முதலில் வில்லியாக நடிக்க இருந்தது இந்த நடிகையாம்..!
Rajini Interview

பொதுவாகவே ஆண் வாரிசு வேண்டும் என்று நினைக்கும் இந்தச் சமூகத்தில், ரஜினியின் பதில் மிகத் தெளிவாகவும், முற்போக்கு சிந்தனையுடனும் இருந்தது. அந்தக் கேள்விக்கு பதிலளித்த ரஜினி, "எனக்கு ஆண் குழந்தை இல்லை என்ற வருத்தமோ, ஏக்கமோ ஒரு நாளும் இருந்ததில்லை. இதுகுறித்து என் மனைவி லதாவிடமும் நான் கேட்டிருக்கிறேன். அவருக்கும் அந்த எண்ணம் துளியும் கிடையாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும் பேசிய ரஜினி, ஆண் பிள்ளைகள் இருந்து பெற்றோர்களுக்கு என்ன செய்வார்களோ, அதைவிடப் பல மடங்கு அதிகமாகத் தனது மகள்கள் தனக்குச் செய்வதாகக் கூறினார். குறிப்பாகத் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவைக் குறித்துப் பேசுகையில் ரஜினி நெகிழ்ந்து போனார். "எனக்கு இரண்டு மகள்களையும் மிகவும் பிடிக்கும். ஆனால், எனக்கு உடல்நலக் குறைவோ அல்லது வேறு ஏதேனும் தேவையோ என்றால், அதை என் கண்களைப் பார்த்தே புரிந்துகொண்டு முதலில் ஓடி வருவது ஐஸ்வர்யாதான்" என்று உருக்கமாகக் குறிப்பிட்டார். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உன்னதமான பந்தத்தை இந்த வரிகள் அழகாக வெளிப்படுத்தின.

இதையும் படியுங்கள்:
என்னது! கருப்பு நிற ஆப்பிளா? 'சூப்பர் ஃ புரூட்' பிளாக் டைமன்ட் ஆப்பிள் தெரியுமா?
Rajini Interview

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், ஒரு தகப்பனாகத் தனது மகள்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும் பாசமும் பலருக்கும் முன்னுதாரணம். இந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாவதற்கு முக்கியக் காரணமே, அதில் உள்ள ரஜினியின் நேர்மையும், தந்தைக்கே உரிய பாசமும்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com