"விஜய் தேவரகொண்டா மாதிரிதான் கணவர் வேண்டும்" ராஷ்மிகா போட்ட பதிவால் ரசிகர்கள் ஷாக்!

Rashmika - Vijay Devarakonda
Rashmika - Vijay Devarakonda

நடிகை ராஷ்மிகா மந்தனா அவரது கணவர் குறித்து போட்ட பதிவால் விஜய் தேவரகொண்டாவை தான் அவர் திருமணம் செய்து கொள்ள போகிறாரா என மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

2016ஆம் ஆண்டு, பெல்லி சூப்புலு என்னும் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர், நடிகர் விஜய் தேவரகொண்டா. அதன்பின், இவரது நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதன் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்தார்.

தொடர்ந்து இவரது நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் தான் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் ஒன்றிணைந்தனர். இவர்களின் 'இன்கேம் இன்கேம்' பாடல் பான் இந்தியா அளவில் ஹிட்டானது. இதன் பிறகு இவர்களது ஜோடியை ரசிகர்கள் அதிகம் விரும்பினார்கள்.

அடிக்கடி இருவரும் ஒன்றாக சுற்றுவது, நெருக்கமாக பழகுவது என சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படம் மூலம் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பேசப்பட்டது. ஆனால் இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், தற்போது ராஷ்மிகா மந்தனா போட்ட ஒரு பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
"இது என் இடம்" திகிலூட்டும் ஹன்சிகாவின் கார்டியன் டீசர்... எப்படி இருக்கு?
Rashmika - Vijay Devarakonda

அதில், “ராஷ்மிகா மந்தனாவின் கணவராக வருவதற்கு ஒருவர் என்ன குணங்களைக் இருக்க வேண்டும், ராஷ்மிகா இந்தியாவின் நேஷனல் க்ரஷ் அவரது கணவர் அவரைப்போலவே சிறப்பு வாய்ந்தவராக இருக்க வேண்டும். அவங்க கணவர் VD மாதிரி ஒருவராக இருக்கவேண்டும். நாங்கள் ரஷ்மிகாவை ராணி என்று அழைக்கிறோம், எனவே அவருடைய கணவரும் ஒரு ராஜாவைப் போல இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அதற்கு எக்ஸ் வலைதள பக்கத்தில் பதில் அளித்த ராஷ்மிகா ‘இது மிகவும் உண்மை என சூசகமாக பதில் அளித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com