இயக்குனர் செல்வராகவனின் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
'நானே வருவேன்' படத்தின், ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இதற்கான படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்குவதாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், அப்போது படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தனுஷின் கால்ஷீட் கிடைக்காததாலும்,செல்வராகவன் தன் சாணிக் காயிதம் மற்றும் பீஸ்ட் படங்களில் பிசியாக இருந்ததாலும், 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போனதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்படத்திற்கு நாளை படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இப்படத்திற்கான இசையமைப்பு யுவன் சங்கர் ராஜாவும் ஒளிப்பதிவு அரவிந்த் கிருஷ்ணாவும் மேற்கொள்ளவிருக்கின்றனர். இப்படத்தின் தயாரிப்பு கலைப்புலி எஸ் தாணு என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் வெற்றிபெற்ற நிலையில் இப்போது 'நானே வருவேன்' படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.