கோட் படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட்பிரபு? வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி!

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

விஜய்யின் கோட் படத்தை இயக்கி வரும் இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் தற்போது கமலஹாசனின் படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி எனும் இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படம் முடிந்த பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ரஜினிகாந்தின் 171வது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சிவகார்த்திகேயன் இடம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இயக்குனர் வெங்கட்புரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயேன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விஜய்யின் கோட் படத்தை இயக்கி வரும் இயக்குனர் வெங்கட்பிரபு அதன் இறுதிகட்ட பணிகளில் தீவிரமாகியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் என தற்போது புது தகவல் கசிந்துள்ளது.

அடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் நடிகர் சிவகார்த்திகேயனுன் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com