நெல்சன் தயாரிப்பில் வில்லனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா!

எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா

தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தற்போது இயக்குனர் நெல்சன் தயாரிக்கும் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

இயக்குனர் நெல்சன் திலீப் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை இயக்கி அசத்தியிருப்பார். இவரின் நடிப்பில் டாக்டர், கோலமாவு கோகிலா, பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. இயக்குனர் அவதாரத்தில் இருந்து தயாரிப்பாளராக தற்போது களமிறங்கியுள்ளார். இவரின் இந்த படத்தை நெல்சனின் உதவி இயக்குநரான சிவபாலன் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். குஷி, வாலி போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். சமீப காலமாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இவர் வில்லனாக நடித்த அனைத்து படங்களுமே செம ஹிட் என்றே கூறலாம்.

சிலம்பரசன் நடித்த மாநாடு, விஷாலுடன் மார்க் ஆண்டனி, சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா என ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை வித்தியாசப்படுத்தி காட்டி வருகிறார். தொடர்ந்து தற்போது நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இந்த படமும் அமோக வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் டாடா, லிஃப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி எஸ்.ஜே.சூர்யா இந்தப் படத்தில் நடித்து வருவதாகவும், மைசூரில் கவின் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவருக்கும் இடையிலான முதல் கட்டப்படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com