ரஜினியுடன் இணையும் மாரி செல்வராஜ்!

Director Mari Selvaraj with Rajinikanth
Director Mari Selvaraj with Rajinikanth
Published on

டிகர் ரஜினிகாந்த்தின் 172 வந்து படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் கதைகளை தாண்டி, தான் நடிக்கும் கதாபாத்திரத்தினுடைய முக்கியத்துவத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து படங்களை ஒப்புக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் உச்சபட்ச நட்சத்திரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

இவ்வாறு ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைப்படத்தில் ரஜினி நடத்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது நடிகர் ரஜினியின் 170 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 171 வது படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைகிறார்.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் 172 வது படம் மாரி செல்வராஜ் உடன் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பரியேறும் பெருமாள், கர்னன், மாமன்னன் என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் மாரி செல்வராஜ். மேலும் மாரி செல்வராஜின் கதைகள் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை கண்ணாடி போன்று காட்சிப்படுத்தும். இதனாலேயே மாரி செல்வராஜ் படங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் மாரி செல்வராஜ் இணைவது தமிழ் திரை உலகில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.மாரி செல்வராஜ் படங்கள் அதிகம் கருத்தாக்கம் உள்ளதாக இருக்கும் என்பதாலும், நடிகர் ரஜினி நடிக்க இருப்பதால் பிரம்மாண்டமாக உருவாகும் என்பதாலும் ரஜினியின் 172 வது படம் முக்கிய பேசுபொருளாக தமிழ் திரை உலகில் மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com