கங்குவா படப்பிடிப்பின் சூர்யாவின் பார்ட் ஷூட்டிங் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தன. தொடர்ந்து சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி ஃபிலிம் சிட்டியின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன.
இதில், சில மாதங்களுக்கு முன்பு, சூர்யாவின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, 10 அடி உயரத்தில் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ரோப் கேமிரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவர், மறுநாளே விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் தற்போது தனது கங்குவா படத்தின் பகுதி ஷூட்டிங்கை நிறைவு செய்ததாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், கங்குவா படத்தின் எனது கடைசி ஷாட் இன்றுடன் நிறைவடைந்துவிட்டதாகவும், முழு படம் எடுக்கப்பட்ட வரை பாஸிட்டிவ்வாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது இந்த படத்தின் முடிவு, ஆனால் பல விஷய்ங்களுக்கு இது ஒரு தொடக்கம். இயக்குனர் சிவாவிற்கு மிக்க நன்றி. கங்குவா எனக்கு மிகப்பெரிய ஸ்பெஷல். பெரிய திரையில் உங்களை சந்திப்பதற்காக காத்து கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.