தரமான சம்பவத்திற்கு தயாராகி வரும் கமல்!

தரமான சம்பவத்திற்கு தயாராகி வரும் கமல்!
Published on

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 2018ம் ஆண்டில் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வெளியானது. அதன்பின்னர் சில வருடங்களாகவே நடிக்காமல் இருந்த நிலையில், 2019ல் சியான் விக்ரம் நடிப்பில் 'கடாரம் கொண்டான்' படத்தை தயாரித்திருந்தார்.

இந்நிலையில், 4 வருடங்களுக்குப் பின், 2022ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படம், அவரை திரையுலகின் உச்சத்திற்கே கொண்டு சென்றதோடு, மிகப்பெரிய வசூல் வேட்டையும் நடத்தியது.

திரையுலகின் அனைத்து வேலைகளையும் தனி ஒருவராக அன்று முதல் இன்று வரை திறம்படச் செய்துவரும் கமல், 'விக்ரம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது படுபிஸியாக இயங்கி வருகிறார்.

'விக்ரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கிடப்பில் இருந்த 'இந்தியன் 2' படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில், ராகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில், படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நடிப்பு தவிர, அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் 'SK21' படத்தை கமல் தனது ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பு பணிகளை கவனித்துக்கொண்டு வருகிறார்.

அதைத் தொடர்ந்து, சிம்புவின் 'STR48' படத்தையும், அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு படத்தையும் கமலின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

அடுத்தடுத்து தயாரிப்பில் ஒருபுறம் பிஸியாக இருந்தாலும், 'இந்தியன் 2' படத்தின் வேலைகள் முடிந்தபின்னர், இயக்குநர் ஹெச்.வினோத்துடன் அடுத்த படத்தில் விரைவில் இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி படுபிஸியாக இருந்து வரும் கமல், பிரபல இயக்குநர்களின் அடுத்தடுத்த படங்கள், முக்கிய நடிகர்களுடன் கூட்டணி என, மீண்டும் திரையில் தரமான சம்பவத்தை நிகழ்த்தவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com