முதன்முதலில் பார்த்தேன்!

முதன்முதலில் பார்த்தேன்!

– ராகவ் குமார்.

திருமணமான கையோடு, புதுமணத் தம்பதிகளான நயன்தாராவும்   விக்னேஷ் சிவனும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள தாஜ் கிளப் நட்சத்திர ஹோட்டலில் மதிய உணவுடன் இந்த சந்திப்பு நடந்தது.

சில மணி நேரங்கள் கால தாமதமாக வந்த இந்த நட்சத்திர ஜோடி, பத்திரிகையாளர்களிடம் சில நிமிடங்களே பேசினார்கள். காரணம் – எக்கசக்க மீடியா ஆட்கள் வந்து குவிந்து தள்ளுமுள்ளு நடந்ததில், நயந்தாராவின் பாதுகாவலர் தடுமாறிக் கீழே விழ, நயன்தாரா பதரிப் போனார். 

நயன்தாரா மஞ்சள் நிற புடவையிலும், விக்கி சாம்பல் நிற ஷர்ட்டிலும் அசத்தலாக வந்திருந்தார்கள். "இது வரை எங்கள் படைப்புகளுக்கும், வேலைக்கும் ஆதரவு தந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. இனியும் எங்கள் பணிகளுக்கு ஆதரவு தாருங்கள்'' என்றார் நயன்தாரா

விக்னேஷ் சிவன் ''நான் முதன்முதலில் இவங்களிடம் கதை சொல்ல இந்த ஓட்டலில் தான் சந்தித்தேன். இப்போது கல்யாணம் முடித்து இந்த சந்திப்பு கொஞ்சம் சர்ரியலாகத்தான் இருக்கு'' என்றார். 

''எங்க இருவர் கேரியருக்கும் தொடர்ந்து ஊடகத்தினரான உங்கள் ஆதரவு வேண்டும்'' என்று ஜோடியாகக் குரல் கொடுத்தனர் நயனும் விக்கியும்!

அப்படி என்றால் நயன்தாரா தொடர்ந்து நடிக்க  போகிறார் என்றுதானே  அர்த்தம்? லேடி சூப்பர் ஸ்டார் தொடர்ந்து வெற்றி படங்களை தர வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com