ஒன்று சேர்ந்த இரு புயல்கள் - ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஒன்று சேர்ந்த இரு புயல்கள் - ரசிகர்கள் மகிழ்ச்சி!

நடிகர் வடிவேலுவை வைகை புயல் என்று ரசிகர்கள் அழைப்பார்கள். இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானை இசை புயல் என்று அழைப்பார்கள். வடிவேலு, ரஹ்மான் இசையில் பாடல் ஒன்றை பாடி உள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்.'

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

'மாமன்னன்' படத்திற்காக யுகபாரதி வரிகளில் உருவான ஒரு பாடலை, ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வைகை புயல்’ வடிவேலு பாடியுள்ளார். இப்பாடல் விரைவில் வெளியாகும் என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் 'மாமன்னன்' படத்தின்  போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. தற்போது இப்பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 'மாமன்னன்' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு இடைவெளிக்கு பின் வடிவேலு ரஹ்மான் பாடலை பாடிக்கொண்டு வருகிறார். கிளம்பிட்டாருயா, கிளம்பிட்டாரு நம்ம வடிவேலு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com