விஜய்க்கு இதுதான் கடைசி படம்.. சோகத்தில் ரசிகர்கள்!

Vijay
Vijay

முழு நேரமாக அரசியலில் குதிக்கபோவதாக அறிவித்த நடிகர் விஜய்யின் கடைசி படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வந்தார். ஆண்டுக்கு ஒரு படம் நடித்தாலும் ஹிட் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தார். இவரின் படங்களுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி என்றாலும் கூட இவர் இனி சினிமாவில் நடிக்கபோவதில்லை என்று அறிவித்தது ரசிகர்களுக்கு பேரிடியாய் விழுந்தது.

விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு நலப்பணிகளை செய்து வந்த விஜய், தானே களத்தில் இறங்கலாம் என முடிவெடுத்தார். இதனையடுத்து படிப்படியாக அனைத்து தொகுதி மாணவர்களுக்கு விருது வழங்கியது, வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்கியது என களப்பணிகளில் ஈடுபட்டார். இதன் மூலம் மக்களும் விஜய்யின் அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தப்படி தமிழக வெற்றி கழகம் உருவாக்கி, இனி முழு நேர அரசியல் பணிகளை செய்வதாக அறிவித்தார். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று கூறி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

இவரின் வருகையால் அரசியலில் ஏதேனும் மாற்றம் வருமா என 2 ஆண்டுகள் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் படத்தின் டாட்டா கூறி நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து கமிட் ஆன காரணத்தால் தளபதி 69 படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவில் இருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்துள்ளார். கோட் பட ரிலீசுக்கு பிறகே இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com