குருவிக்காரனாக மாறிய யோகி பாபு!

யோகி பாபு
யோகி பாபு

நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ’குருவிக்காரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி, பிறகு குணச்சித்திர வேடத்திலும் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியிருக்கிறார் யோகி பாபு.

மேலும் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களும் அவருக்கு புகழை சேர்த்த வண்ணம் இருக்கின்றன. இப்படி தன்னுடைய தொடர் நடிப்பால் தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக யோகி பாபு மாறி இருக்கிறார்‌. யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தின் கதைகள் விமர்சன ரீதியான பாராட்டுக்களை பெறுவதோடு, வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு குருவிக்காரன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தை கேபி கதிர்வேலு என்பவர் இயக்குகிறார். ராக் ப்ரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ஏ எஸ் ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி திவாகர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

படத்திற்கு ஷாம் சி எஸ் இசை அமைக்கிறார். இப்படத்தின் எடிட்டராக லாரன்ஸ் கிஷோர் பணியாற்றுகிறார்.வசனம் ராஜசேகர் மற்றும் கதிர்வேல், பாடல்கள் விவேக் மற்றும் உமாதேவி, டி ஓ பி பிரிவில் பிரசன்னா குமார் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

இப்படம் நரிக்குறவர் சமூக மக்களினுடைய வாழ்க்கை நிலைகளை எடுத்துரைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. படத்தில் நரிக்குறவராக யோகி பாபு நடித்திருக்கிறாராம். அம்மக்களின் வாழ்க்கை முறை, காதல், சந்திக்கும் பிரச்சனைகள் போன்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com