கோவாவில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகை சமந்தாவின் அசத்தல் உடை அனைவரையும் கவர்ந்தது. நடிகை சமந்தாவுக்கு பேசும் வாய்ப்பு கிடைத்ததையடுத்து, அசத்தல் உடையில் வந்து அபாரமாய் ஜொலித்தார்.
கோவாவில் 20-ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் சமந்தா, தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் நடிகைகளில் இந்த வாய்ப்பை பெற்றுள்ள முதல் நடிகை என்ற பெருமை சமந்தாவிற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விழாவில் பங்கேற்றுள்ள சமந்தா, ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் மாடர்ன் உடையில் வலம் வந்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து, விவாகரத்து பெற்ற பின் சமந்தா தோன்றும் முதல் விழா இது என்ற வகையில் பலரது கவனத்தைக் கவர்ந்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு என நடித்து வரும் சமந்தா, 'தி பேமிலி மேன் 2' என்ற வெப் சீரிசிலும் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். இவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்த மாதத்தில் வெளியாக உள்ளது. சகுந்தலம் படத்திலும் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.