பனீர் பக்கோடா செய்யலாமா?

பனீர் பக்கோடா செய்யலாமா?
Updated on

(சிறுவர்களே... சமையலறையில் ரெசிபிகளை தயார் செய்யும்போது, பெரியவர்கள் யாரேனும் அவசியம் உங்கள் உடன் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.)

தேவையான பொருட்கள்:

பனீர் - 150 கிராம், கடலைப் பருப்பு – 200 கிராம், சோம்பு - ஒரு டீஸ்பூன் , வரமிளகாய் – நான்கு,  கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, மல்லித்தழை -1 டேபிள்ஸ்பூன், உப்பு ,எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். 

கடலைப் பருப்புடன், சோம்பு, வரமிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அத்துடன் கருவேப்பிலையையும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.  அரைத்த பருப்புடன், மல்லித்தழை, உப்பு,
பனீர் துண்டுகள் சேர்த்து நன்கு கலந்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 

logo
Kalki Online
kalkionline.com