இன்று டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. இன்று முதல் நாள் கூட்டத் தொடரிலேயே, 3 புதிய வேளன் சடடங்களை திரும்பப் பெறும் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நாடாளுமனற வட்டாரங்களில் வெளியான தகவல்கள்:
இன்று தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பிஜேபி எம்.பிக்கள் கூட்டத்தொடரில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
–இவ்வாறு நாடாளுமனற வட்டாரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தக் கூட்டத் தொடரில் மத்திய அரசு 26 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.