இன்னிசைக் குயில் லதா மங்கேஷ்கர் மறைவு: நாடு முழுவதும் 2 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

இன்னிசைக் குயில்  லதா மங்கேஷ்கர் மறைவு: நாடு முழுவதும் 2 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!

பிரபல இந்தித் திரைப்படப் பாடகி இன்னிசைக் குயில் லதா மங்கேஷ்கர் நேற்று மறைந்ததையடுத்து இன்று நாடாளுமன்றத்தில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

லதா மங்கேஷ்கருக்கு கடந்த மாதம் 8-ம் தேதி கொரோனா தொற்று காரணனமாக  மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லதா சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை சேர்க்கப்பட்டு, கடந்த 29 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.12 மணியளவில் லதா மங்கேஷ்கர் காலமானார்..

இந்நிலையில் இன்று கூடிய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை கூட்டத்தில், இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றிய பின்பு, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, மாநிலங்களவையின் நிகழ்வுகள் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இவரின் இறப்புக்காக அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியா முழுவதும் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com