ஐபிஎல் கிரிக்கெட் போட்டி; புதிதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அறிவிப்பு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி; புதிதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அறிவிப்பு!

ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணிக்கு 'லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்' என பெயரிடப்பட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது

ஐபிஎல் . கிரிக்கெட் போட்டியின் 15-வது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என இந்திய கிரிக்கெட் சங்க வாரியமான பிசிசிஐ அறிவித்தது . மேலும் இந்த தொடரில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அறிமுகமாகப் படுத்தப் படுவதாகவும் அறிவிப்பு வெளியாயிற்று. .

லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளவர் மற்றும் ஆலோசகராக கௌதம் கம்பீர் ஆகியோர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டனர் . ஏலத்துக்கு முன்பாக இரு அணிகளும் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலும் அண்மையில் வெளியிடப்பட்டது .

இந்நிலையில் லக்னோ அணிக்கு ' லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ' என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com