ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ரோம் பயணம்!

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ரோம் பயணம்!

இத்தாலி தலைநகர் ரோமில் நாளை நடக்கவுள்ள ஜி-20 மற்றும் சிஓபி-26 மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி இன்று ரோம் சென்றடைந்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு மற்றும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
பிரதமர் மோடி இத்தாலியில் நாளையும் நாளி மறுநாளூம் (அக்டோபர் 30 மற்றும் 31) நடக்கவுள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று ரோம் புறப்பட்டு சென்றார். மேலும் ரோமிலிருந்து கிளாஸ்கோ சென்று அங்கு உலக நாடுகளின் முக்கிய தலைவா்கள் பங்கேற்கும் சிஓபி-26 மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்கிறார். இதில் உலக நாடுகளின் முக்கியத் தலைவா்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். ஜி-20 மாநாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சா்வதேச பொருளாதாரம், சுகாதார மீட்சி, பருநிலை மாற்றம் குறித்து பிரதமா் மோடி பிற தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இவ்வாறு அநத அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com