50 லட்சம் ரூபாய் சொத்து: ராகுல் காந்திக்கு உயில் எழுதிய 78 வயது மூதாட்டி!

50 லட்சம் ரூபாய் சொத்து: ராகுல் காந்திக்கு உயில் எழுதிய 78 வயது மூதாட்டி!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வசிக்கும் புஷ்பா முன்ஜியால் என்ற 78 வயது மூதாட்டி 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனது சொத்துக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல காந்திக்கு எழுதி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 78 வயது மூதாட்டியான புஷ்பா முன்ஜியால்,50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள்,10 தோலா தங்கம் உட்பட தனது சொத்துக்கள் அனைத்தையும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெயரில் எழுதி வைத்துள்ளார். டேராடூன் உயர்நீதிமன்றத்தில் புஷ்பா தனது சொத்துக்களின் உரிமையை ராகுல் காந்திக்கு அளித்து உயில் தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து புஷ்பா முன்ஜியால் கூறியதாவது:

இந்திரா காந்தியும்,ராஜீவ் காந்தியும் இந்த நாட்டின் ன்=-நலனுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.அந்த வகையில்,தற்போது சோனியா காந்தியும்,ராகுல் காந்தியும் தேச சேவைக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர்.ராகுல் காந்தியின் சேவை நம் நாட்டுக்கு அவசியம் தேவை. அதனால்தான் எனது சொத்துக்களை அவருக்கு வழங்குகிறேன்.

-இவ்வாறு புஷ்பா முன்ஜியால் கூறினார்.

இதனையடுத்து,உத்தரகாண்ட் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் பிரீதம் சிங்கின் வீட்டில் வைத்து புஷ்பா முன்ஜியால் தனது சொத்துக்களுக்கான ஆவணங்களை வழங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com