கலைஞர் எழுதுகோல் விருது: ஐ.சண்முகநாதனுக்கு அறிவிப்பு!

கலைஞர் எழுதுகோல் விருது: ஐ.சண்முகநாதனுக்கு அறிவிப்பு!

கலைஞர் கருணாநிதியின் பிறந்ததினத்தை முன்னிட்டு இன்று மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

-இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, கலைஞர் பிறந்த நாளான ஜுன் 3-ம் தேதியன்று ஆண்டுதோறும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் 2021-ஆம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் அறிவிக்கப் பட்டுள்ளார்.  இன்று நடைபெறும் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவில், கலைஞர் எழுதுகோல் விருது ஐ.சண்முகநாதனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com