22-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் ரபேல்! 

22-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் ரபேல்! 

பிரான்ஸ் நாட்டின் பாரீசில் 'பிரெஞ்ச் ஓபன்' டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.  அந்தவகையில் ரபேலுக்கு இது 22-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும்.

நேற்று நடந்த இறுதிச்சுற்றுப் போட்டியில் ரபேல் நடால்நார்வே நாட்டை சேர்ந்த காஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார். முதல் செட்டில் 6-3 என்ற புள்ளி கணக்கில் ரபேல் வெற்றிபெற்றார்.

2-வது செட்டில் ரூட் ஆரம்பத்தில் முன்னிலை வகித்தாலும், இறுதியில் அச்சுற்றை மீன்டும் நடால் கைப்பற்றினார்.  3- வது செட்டிலும் நடால் அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றி 6-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டதையும் தட்டி சென்றார்.

ரபேல் நடால் தனது 11 வது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கோப்பையை முத்தமிட்டு ஆனந்த கன்ணீர் வடித்த காட்சி வைரலாகியது. மேலும் அவர் வெல்லும் 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com