310 கோடி ரூபாயில் உருவான 9 பாலங்கள்: முதல்வர் ஸ்டாலின் இன்று திறப்பு!

310 கோடி ரூபாயில் உருவான 9 பாலங்கள்: முதல்வர் ஸ்டாலின் இன்று திறப்பு!

தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.310.92 கோடி செலவில் உருவான 9 பாலங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இத்குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கானலிக்காட்சி மூலம் 9 பாலங்களைத் திறந்து வைத்தார். தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர். மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ரூ. 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் இந்த பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் புதிதாகக் கட்டப்பட்ட இந்த 6 ரயில்வே மேம்பாலங்கள், 1 ரயில்வே கீழ்ப்பாலம், 1 உயர்மட்டப் பாலம் மற்றும் 1 பல்வழிச் சாலை மேம்பாலம் ஆகிய 9 பாலங்களை இன்று திறந்து வைத்தார்.

ரயில்வே கடவுகளில் கட்டப்பட்டுள்ள பாலங்களால் இனி இரயில்வே கடவுகளில் காத்திருப்பு நேரம் தவிர்க்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரம் குறையும். மேலும் பொதுமக்கள் உரிய நேரத்தில் பாதுகாப்புடன் பயணம் செய்ய முடியும்.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com