கிராமங்களில் இன்டர்நெட் வசதி; முதல்வர் ஸ்டாலின் தொடக்கம்!

கிராமங்களில் இன்டர்நெட் வசதி; முதல்வர் ஸ்டாலின் தொடக்கம்!

தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களில் ரூ.1,627 கோடி மதிப்பீட்டில்  அதிவேக இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி தரும் பாரத் நெட் திட்டத்தை முதவர் மு..ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் கன்னியாகுமரி மாவட்டம் முத்தாலக்குறிச்சியில் பைபர் ஆப்டிக் கம்பி வடம் பதிக்கும் பணியையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது; 

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் அதிவேக இணைய வசதி ஏற்படுத்தித் தரும் வகையில் பாரத் நெட் என்கிற  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்,தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு ஓராண்டுக்குள் இணைய வசதி செயல்படுத்தப்படும் என தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,தமிழகத்தில் 12,525 கிராமங்களில் ரூ.1,627 கோடி மதிப்பீட்டில் இணையவசதி ஏற்படுத்தி தரும் பாரத் நெட் திட்டத்தை முதல்வர்  மு..ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதன்முதலாக கன்னியாகுமரி மாவட்டம் முத்தாலக்குறிச்சியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பைபர் ஆப்டிக் கேபிள் மூலமாக தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு ஓராண்டுக்குள் அதிவேக இணையதள வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com