சினிமாவில் இனி நடிக்கப் போவதில்லை; உதயநிதி ஸ்டாலின்!

சினிமாவில் இனி நடிக்கப் போவதில்லை; உதயநிதி ஸ்டாலின்!

தமிழ் சினிமா இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் 'மா மன்னன்' படத்தில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின், அதுவே சினிமாவில் தன் கடைசி படமாக இருக்கும் என்றும், இனி முழநேர அரசியலில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'நெஞ்சுக்கு நீதி' படம் இம்மாதம் 20-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.  இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது;

தந்தை ஸ்டாலினிடம் 'நெஞ்சுக்கு நீதி' டைட்டில் குறித்து என் தந்தை ஸ்டாலினிடம் பேசும்போது, அவர்  நல்ல படமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்திவிட்டு ஓகே சொல்லிவிட்டார். மேலும் என் மற்ற குடும்ப உறுப்பினர்களிடமும் இதற்கு ஒப்புதல் பெற்ற பிறகே இந்த தலைப்பை படத்துக்கு வைத்தோம்.

இப்போது இயக்குனர் மாரி செல்வராஜின் 'மா மன்னன்' படத்தில்  நடிக்கிறேன். இந்த படமும்  மிகத் தரமானதாக இருக்கும். மேலும் 'மா மன்னன்' அநேகமாக என் கடைசி திரைப்படமாக இருக்கும். இந்த படத்தில் நடித்து முடித்தவுடன், முழு நேர அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறேன். 

-இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com