தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் கடந்த மார்ச் 9-ம் தேதி முதல் மார்ச் 16-ம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் முன்னதாக அறிவித்தது.
இந்நிலையில் இந்த விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட் குறித்து தெரிவித்ததாவது;
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று (ஏப்ரல் 20) வெளியிடப்படும் என்று ஏற்கனவே தேர்வுத்துறை அறிவித்தது.
அதன்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
-இவ்வாறு தமிழக அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும்,வருகிற ஏப்ரல் 27 முதல் ஏப்ரல் 29 வரை நடைபெற உள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு, ஹால் டிக்கெட் கட்டாயம் தேவை எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.