TNPSC குரூப் 1 தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

TNPSC குரூப் 1 தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் குறிப்பிட்டதாவது;

தமிழகத்தின் அரசுத்துறையில்  பல்வேறு பதவிகளான துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளுக்கு குரூப் 1 தேர்வு முதல் பணிநியமனம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் இப்பதவிகளுக்கு காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்

மேலும் ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30- ம் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும். அதற்கடுத்து  முதன்மை தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

-இவ்வாறு டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com