12 மொழிகளில் வெளியாகிறது திருக்குறள்; மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அறிவிப்பு!

12 மொழிகளில் வெளியாகிறது திருக்குறள்; மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அறிவிப்பு!

இந்தி உட்பட 12 மொழிகளில் திருக்குறள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்று மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

-இதுகுறித்து மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்ததாவது;

திருக்குறளை இந்தி உட்பட 12 மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகள் முடிவடைந்து அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஓடியா, நேபாளி, உருது, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் இந்த 12 மொழிகளில் திருக்குறள் வெளியாகும். மேலும் திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையையும் அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப் படுகிறது.

மனிதனின் வாழ்வியியல் அங்கங்களான அறம், பொருள், இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் திருக்குறள் விளக்குகிறது. இதில் உள்ள கருத்துகள் இனம், மொழி, பாலின பேதங்களின்றி எக்காலத்துக்கும் பொருந்துவதால் திருக்குறள் 'உலகப் பொது மறை' என்றும் அழைக்கப்படுகிறது. திருக்குறளின் சிறப்பை அறிந்த அறிஞர்கள் 1800-ம் ஆண்டில் இருந்தே 43 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.

இருப்பினும் திருக்குறள், பல மொழிகளில் முழுமையாகச் சென்றடையவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், முதற்கட்டமாக அரசமைப்பின் 21 மொழிகளில் பஞ்சாபி, மணிப்புரி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி மொழிகளில் திருக்குறளை ஏற்கெனவே மொழிபெயர்த்திருந்த நிலையில், உலகின் அனைத்துமொழிகளிலும் மொழிபெயர்க்கத் திட்டமிட்டது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இந்தி உட்பட 12 மொழிகளில் திருக்குறள் வெளியாகும்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com