6 துபாய் நிறுவனங்களுடன் தமிழகம் ஒப்பந்தம்; முதல்வர் ஸ்டாலின்!

6 துபாய் நிறுவனங்களுடன் தமிழகம் ஒப்பந்தம்; முதல்வர் ஸ்டாலின்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை சென்னைக்கு திரும்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

துபாயில் நடந்து வரும் சர்வதேச தொழிற்கண்காட்சியில், தமிழகத்தில்  தொழில் தொடங்க 6 துபாய் நிறுவனங்களுடன் 6100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு கிட்டதட்ட 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அந்த 6 நிறுவனங்களோடு நேரடியாக ஒப்பந்தம் போட்டு இருக்கிறோம். அதனால் அவர்கள் எந்த நிபந்தனையும் இன்றி தொழில்களை எளிதாக நடத்த முடியுமென்றும், அதற்கான சூழ்நிலையை தமிழகத்தில் உருவாக்கித் தருகிறோம் என்று எடுத்துச் சொன்னோம்.

அந்த 6 நிறூவனங்கலும் அந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள். மேலும் இந்த தொழில்களைத் தொடங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து ஒப்பந்தம் போட்டுள்ளோம். ஆனால் குறிப்பிட்ட முன்னதாகவே அந்நிறுவனங்களைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை செய்து வருகிறோம்.

-இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com