ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: கோவா முதல்வர் அதிரடி!

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: கோவா முதல்வர் அதிரடி!

நாட்டில் சமீபத்தில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்ததில் கோவா உட்பட 4 மாநிலங்களில் பிஜேபி கட்சி வெற்றி பெற்றது.

இதையடுத்து கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் 2-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் . அவருடன் எட்டு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர் .

இதையடுத்து கோவா புதிய அமைச்சரவையின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .அதில் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியின்படி ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டரை ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மனிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த தன் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது:

கோவாவில் இந்த  புதிய நிதியாண்டு முதல் ஆண்டொன்றுக்கு  ஒவ்வொரு வீட்டுக்கும் தலா  3 இலவச சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்..மேலும் இரும்புத் தாது சுரங்க தொழிலை மீண்டும் ஊக்குவிப்பது மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவது ஆகியவற்றிற்கும் முன்னுரிமை அளிக்கப் போவதாகவும்  கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com