நாட்டில் சமீபத்தில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்ததில் கோவா உட்பட 4 மாநிலங்களில் பிஜேபி கட்சி வெற்றி பெற்றது.
இதையடுத்து கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் 2-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் . அவருடன் எட்டு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர் .
இதையடுத்து கோவா புதிய அமைச்சரவையின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .அதில் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியின்படி ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டரை ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மனிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த தன் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது:
கோவாவில் இந்த புதிய நிதியாண்டு முதல் ஆண்டொன்றுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 3 இலவச சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்..மேலும் இரும்புத் தாது சுரங்க தொழிலை மீண்டும் ஊக்குவிப்பது மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவது ஆகியவற்றிற்கும் முன்னுரிமை அளிக்கப் போவதாகவும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.