பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க இன்றே கடைசி நாள்: ஆன்லைனில் இணைப்பது எப்படி?

பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க இன்றே கடைசி நாள்: ஆன்லைனில் இணைப்பது எப்படி?

நாடு முழுவதும் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்படி இணைக்கத் தவறினால் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப் படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்ததாவது:

நாட்டில் அனைவரும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி தேதி நாளாகும். அப்படி தவறும் பட்சத்தில் அடுத்த 3 மாதங்கள் வரை ரூ.500 அபராதத்துடனும் அதற்கு பிறகு ரூ.1000 த்துடன் கூடிய அபராதத்துடன் மட்டுமே ஆதார் எண்ணை இணைக்க முடியும்.

-இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பதற்கான வழிமுறைகள்;

* வருமான வரித் துறையின் www.incometax.gov.in/ https://www.incometax.gov.in/iec/foportal என்ற முகவரிக்கு செல்லவேண்டும்.

* அந்த இணையதளத்தின் இடது பக்கத்தில், Quick Links என்ற ஆப்ஷனுக்குச் சென்று 'லிங்க் ஆதார்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் அதில் உங்கள் பான் நம்பர் மற்றும் ஆதார் எண் மற்றும் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

*உங்கள் பான் மற்றும் ஆதார் ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்தால், already linked என காட்டப்படும். அப்படி ஏற்கனவே இணைக்கப் படாத பட்சத்தில், உங்கள் செல்போனில் OTP நம்பர் கிடைக்கப் பெறும்.

*அந்த ஓடிபி நம்பரை பதிவிட்டதும் உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்பட்டு விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com