#Breaking: நடிகர் ஷாருக்கான் வீட்டில் ரெய்டு: போதைப் பொருள் தடுப்பு போலீஸார் விசாரணை!

#Breaking: நடிகர் ஷாருக்கான் வீட்டில் ரெய்டு: போதைப் பொருள் தடுப்பு போலீஸார் விசாரணை!
Published on

முமபையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டில் சற்றுமுன் போதை பொருள் தடுப்பு போலீசார் ரெய்டு நடத்தி விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளீயாகியுள்ளது.

மும்பையிலிருந்து கோவா சென்ற உல்லாச கப்பல் ஒன்றில் போதைப் பொருள் விருந்து நடைபெற்ரதை அறிந்த போதைப் பொருள் தடுப்பு போலீஸார் அக்கப்பலில் சோதனை நடத்தினர். அதில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், போதை பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானும் ஒருவர். இதையடுத்து ஆர்யன் கான் கடந்த 8-ம் தேதி முதல் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து வருகிறார்.இதற்கிடையே, நேற்று நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமீன் தர மும்பை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததையடுத்து மேல்முறையீடு செய்துள்ளார். இன்று சிறைக்கு சென்று முதன்முறையாக தன் மகன் ஆர்யன் கானை சந்தித்தார் ஷாருக்கான்.

இந்நிலையில், இப்போது நடிகர் ஷாருக்கானின் இல்லத்திற்கு போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் குழு சென்று ரெய்டு நடத்தி விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளீயாகியுள்ளன. இதையடுத்து இந்த வழக்கு அடுத்த கட்ட எடுத்துச் செல்லப்படக் கூடும் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com