எருமைகூட கருப்பாகவே இருக்கிறது: சீமான் அதிரடி!

எருமைகூட கருப்பாகவே இருக்கிறது: சீமான் அதிரடி!

கருப்பாக இருந்தால்தான் திராவிடர் என்றால் எருமை மாடு கூட கருப்பாகதான் இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக விமர்சித்துள்ளார்

டாக்டர். சிவந்தி ஆதித்தனாரின் 9-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது சிலைக்கு சீமான் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

அம்பேத்காரின் கருத்துக்களை பிரதமர் மோடி செயல்படுத்துவதாக இளையராஜா தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து அதற்காக அவரை விமர்சிக்க வேண்டியதில்லை. இந்நிலையில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா, 'நான் கருப்பு  திராவிடன்.. பெருமைக்குரிய தமிழன்' என்கிறார். கருப்பாக இருந்தால்தான் திராவிடர் என்றால் எருமை மாடுகூட கருப்பாகத்தான் இருக்கிறது. அதனால் நாட்டில் ஒட்டுமொத்த எருமையும் திராவிடரா ? உழைக்கும் மக்கள் நிறம் கருப்பாக தான் இருக்கும். யுவன் சங்கர் ராஜா தான் ஒரு பெருமைமிகு தமிழன் என்று மட்டும் சொல்ல வேண்டியதுதானே?  அவருக்கு புரிதல் இல்லை. கே.ஜி.எஃப் பட ஹீரோ .யாஷ் கூட ''நான் பெருமைமிகு கன்னடிகா'' என்கிறார்.

-இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கராஜா "நான் கருப்பு திராவிடன் பெருமைக்குரிய தமிழன்" என்ற வாசகத்துடன் தான் கருப்பு லுங்கி கருப்பு டீசர்ட் அணிந்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com